Breaking News

கிழக்கில் உள்ள எந்தவொரு இராணுவமுகாமும் எக்காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டாது!!

கிழக்கு மாகாணத்திலுள்ள எந்த ஒரு மாவட்டத்திலிருந்தும் எந்தவோர் இராணுவ முகாமும் எக்காரணம் கொண்டும் அவ்விடங்களிலிருந்து அகற்றப்படமாட்டாது என பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது. இதுகுறித்தது அவ்வமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள இராணுவ முகாம்களில் பல அகற்றப்பட்டுவிட்டதாக பத்திரிகைகளில் வெளியாகிய செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை எனவும், நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும், அதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயுமே பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எனவும் அதற்கெனவே அப்பகுதிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.