Breaking News

கடவுச்சீட்டுத் திணைக்களத்தின் இடமாற்றமும் 26ம் திகதி முதல் மூடப்படவுள்ள பிராந்திய அலுவலகங்களும் !

பயனாளிகளின் நலன் கருதி , வினைத்திறனுடன் கூடிய செவையினை வழங்கும் பொருட்டு, குடிவரவு - குடியகழ்வுத் திணைக்களம் எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து, பத்தரமுல்ல, 'இசுஹுருபாய' புதிய கட்டத்தொகுதிக்கு,  இடமாற்றப்படவுள்ளது. இதனால் கொழும்பு -10, ஆனந்த ராஜகருணா மாவத்தை இல. 41 இல், அமைந்துள்ள பிரதான காரியாலம் மற்றும் கண்டி, மாத்தறை, வவுனியா ஆகிய பிராந்திய காரியாலயங்கழும் , எதிர்வரும் 26ஆம் திகதியிலிருந்து மூடப்படஉள்ளது.

இதன்போது வெளிநாட்டுப் பயண அனுமதிப்பத்திரத்திற்கான சாதாரண சேவை, விசா விநியோகம், கடவுச்சீட்டைப் புதுப்பித்தல் மற்றும் குடியுரிமைச் சேவை என்பன ஓகஸ்ட் 29ஆம் திகதியன்று மட்டுப்படுத்தப்பட்டளவில் இடம்பெறுவதோடு, கடவுச்சீட்டைப் பெற்றுவதற்கான ஒரு நாள் சேவை இடம்பெறமாட்டாதெனவும் அறிவித்துள்ள குடிவரவு - குடியகழ்வுத் திணைக்களம், ஓகஸ்ட் 26 இலிருந்து 29 வரையான திகதிகளில் விமான நிலைய மற்றும் துறைமுகச் செயற்பாடுகள் இயல்பான முறையில் இடம்பெறும் எனவும் அறிவித்துள்ளது.