Breaking News

கடந்த இரண்டு வருடங்களில் ரயில் விபத்துகளில் 323 பேர் பலி

கடந்த 2014 தொடக்கம் 2015 வரையிலான இரண்டு வருட காலப்பகுதியில் ரயில் விபத்துகளில் சிக்கிய 323 பேர் உயிரிழந்துள்ளதுடன் 800 பேர்வரை காயமுற்றுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவிக்கின்றது. இதில் 2014ஆம் ஆண்டு உயிரிழந்தோர் 148 ஆகவும்  2015ஆம் ஆண்டு 175 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாகவும். இவ்விபத்துகளில் மாணவர்களின் தற்கொலை முயற்சியே அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.