Breaking News

மட்டக்களப்பு தேசிய சேமிப்பு வங்கியின் 40வது ஆண்டு நிறைவு விசேட நிகழ்வுகள் மட்டக்களப்பில்.

மட்டக்களப்பு தேசிய சேமிப்பு வங்கியின் 40வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் பல சமூக சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் எஸ்.வி.சுவேந்திரன் தலைமையில் (28) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற சுவாமி விபுலானந்தர் முதியோர்  இல்லத்தில் விசேட நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது இல்லத்தின் முதியவர்களின் நலன் தொடர்பாக அறிந்துகொண்டதுடன் அவர்களுக்கான மதிய உணவும் மற்றும் நன்கொடைகளும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு தேசிய சேமிப்பு வங்கி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
(என்டன்)