Breaking News

நோர்வேயில் ஒரே ஒரு மின்னலால் 300 இற்கு மேற்பட்ட காட்டுமான்கள் பரிதாபகரமாக உயிரிழப்பு !

நார்வே நாட்டில் உள்ள Hardangervidda mountain என்ற பகுதியில் நூற்றுக்கணக்கான காட்டுமான்கள் துள்ளி விளையாடி கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மின்னல் காரணமாக மான்கள் கூட்டத்தில் இருந்த 323 காட்டுமான்கள் பரிதாபமாக உயிரிழந்தன. இவற்றில் 70 குட்டி காட்டு மான்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Hardangervidda mountain பகுதியில் அடிக்கடி திடீர் திடீரென மின்னல் ஏற்பட்ட போதிலும் அதிகளவிலான உயிரிழப்பு நடந்தது இப்போதுதான் என கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறியபோது, 'இதுபோன்று மிகப்பெரிய எண்ணிக்கையில் காட்டுமான்கள் ஒரே மின்னலில் இறந்து போனதை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை. இதுவொரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று தெரிவித்தனர்.