Breaking News

குழந்தையை ஆற்றிலிருந்து காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த தாய் !!!

அமெரிக்காவின் செல்சி ருஸ்ஸல் (32)  தன் குடும்பத்துடன் உத்தாவில் உள்ள போவல் பகுதியில் உள்ள ஏரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள ஒரு படகில் செல்சி தன் 2 வயது மகனுடன் சவாரி செய்துள்ளார்.

படகில் சவாரி செய்தபோது அவரது இரண்டு வயது மகன் எதிர்பாராதவிதமாக கடலில் விழுந்து விட்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்சி எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் நீரில் குதித்து மகனை காப்பாற்ற முயன்றார்.

ஆனால் முடியவில்லை. இறுதியில் வேறு வழியில்லாமல் தனது மகனை ஒரு கையால் நீருக்கு மேலே தூக்கி பிடித்தபடி நீரில் மூழ்க தொடங்கினார். இதனை பார்த்து பக்கத்து படகில் இருந்த உறவினர்கள் குழந்தையை உயிருடன் மீட்டனர்.

ஆனால் செல்சியை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.