Breaking News

மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தினால் நடத்தப்பட்ட பொலிஸ் நடமாடும் சேவை

(என்டன்)

ட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பொலிஸ் நடமாடும் சேவை  இன்று மட்டக்களப்பு  நடைபெற்றது .

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட ,திராய்மடு ,மட்டிக்களி ,முகத்துவாரம் ,பாலமீன்மடு ,அமிர்தகழி ஆகிய கிராம சேவை பிரிவு கிராம மக்களின் நலன் கருதி  ட்டக்களப்பு தலைமை பொலிஸ்  நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பொலிஸ் நடமாடும் சேவை மட்டக்களப்பு  பாலமீன்மடு விக்னேஸ்வரா  வித்தியாலயத்தில் மட்டக்களப்பு பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி எச் .டி .பி .கே .ஹெட்டிஆரச்சி தலைமையில்  இன்று நடைபெற்றது  

இன்று நடைபெற்ற  நடமாடும் சேவையில் பொதுமக்களுடைய பொலிஸ் முறைபாடுகள் , சிறுவர் மகளீர் தொடர்பான முறைபாடுகள் , கிராம மட்டத்தில் கிராம சேவையாளர்களின் ஆவன பதிவுகளான ,கடவுச்சீட்டு , தேசிய அடையாள அட்டை , காணி தொடர்பான ஆவன விபரங்கள், மோட்டார் வாகன தொடர்பான முறைபாடுகள் ,நோய் தொடர்பான ஆயுள் வேத வைத்திய பரிசோதனைகள் அதற்கான மருந்து விநியோகம் மற்றும் மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில்  இலவச கண் பரிசோதனைகள் மற்றும்   இலவச மூக்குகண்ணாடி  போன்ற பல சேவைகள் இங்கு நடைபெற்றன .

இந்நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகளும் ,கிராம மக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது

இந்நிகழ்வில்   மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா  அதிபர் திருமதி .மகேந்திரன் , கல்லடி ஆயுள்வேத வைத்தியசாலை வைத்தியர் அருணன் , வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் , மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் ,மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் , கிராமசேவை உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள் ,பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .