Breaking News

கல்லடியில் இப்போது விடுமுறைக் காலம் எமது எனும் தொனிப்பொருளில் சிறுவர்களுக்கான பட்டம் விடும் நிகழ்வு.

“இப்போது விடுமுறைக் காலம் எமது” எனும் தொனிப்பொருளில் சிறுவர்களுக்கான பட்டம் விடும் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெற்றது. 

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச கலாசார அதிகார சபையின்  சிறுவர்களுக்கான நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்  மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியின் அனுசரணையின்  சிறுவர்களுக்கான பட்டம் விடுத்தல் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் (29) நேற்று மாலை மட்டக்களப்பு கல்லடி டச்பார் கடற்கரையில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி ஷாலினி மதன்குமார், மற்றும் எ.எல்.முசாதிக் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கி உத்தியோகத்தர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கலாசார அதிகார சபை  உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள்,பெற்றோர்கள், பிரதேச மக்கள் என  பலர் கலந்துகொண்டனர்.


“இப்போது விடுமுறைக் காலம் எமது” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற சிறுவர்களுக்கான பட்டம் விடும் நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
(என்டன்)