Breaking News

க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பம்.

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சசை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பிக்க படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் இதற்கென கொழும்பு றோயல் கல்லூரி, கொழும்பு நாலந்தா கல்லூரி, கண்டி விகாராமாஹா தேவி பாலிகா வித்தியாலயம், கண்டி சுவர்ணமாலி பாலிகா வித்தியாலயம், கண்டி சீதா தேவி பாலிகா வித்தியாலயம் மற்றும் யாழ். இந்துக்கல்லூரி எனும் 6 பாடசாலைகளுடன் மேலும் சில பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும்  எனவும் தெரிவிக்கப்படுகின்ற்து.