தனுஷ்- தாணு உரசல்! ரஜினியின் பஞ்சாயத்துக்குக் காத்திருக்கிறார்கள்!
கபாலி’ பட வெற்றியாலும் படம் யூகிக்க முடியாத உயரங்களைத் தொட்டதாலும் இயக்குனரை ரஜினிக்கு பிடித்துப் போய் விட்டதாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றவுள்ளார் என்கிறது கோலிவுட் பட்சி..
இப்படத்தை தனுஷ் தயாரிக்கின்றார்.
இந்நிலையில் இப்படம் கபாலி படத்தின் இரண்டாம் பாகம் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டது
ஆனால், ரஜினியின் நெருங்கிய வட்டாரங்களின் மூலம் கிடைத்த தகவலின்படி இது கபாலி-2 இல்லை ! முழுக்க, முழுக்க புதுக்கதை என உறுதி செய்யப்படுகிறது !
இந்தத் தகவலையும் தாண்டி பா. ரஞ்சித் இயக்கும் சூப்பர் ஸ்டாரின் புது படத்தின் கதை தியாகி இமானுவேல் சேகரன் அய்யா வாழ்க்கையை மையமாகக் கொண்டது என விவரமாக முதன் முதலில் நாம்தான் எழுதி இருந்தோம்.
அதற்குப் பிறகு கிடைத்த புத்தம் புதிய தகவல்களை கீழே கொடுத்திருக்கிறோம்.
தகவல் 1. இந்த படத்திற்காக ராஜ பாளையம் பகுதி மற்றும் சங்கரன் கோவில் பகுதிகளில் செட் போட்டு படம் பிடிக்க உத்தேசம் என்கிறது படக்குழு.
தகவல் 2. மீண்டும் தாணு செய்வதாக இருந்த படம். வாய்ப்பை தன்னிடம் இருந்து தனுஷ் தட்டி பறித்து விட்டதாக கடுங் கோபத்தில் இருப்பதாக செய்தி.
சூப்பர் ஸ்டார் சமாதானம் செய்து வைக்க இருவரும் காத்திருக்கிறார்கள்!!