கிழக்கு பல்கலைக்கழகத்தின் 20ம் பட்டமளிப்பு விழா...
கிழக்கு பல்கலைக்கழக 20ஆவது பட்டமளிப்பு விழா வந்தாறுமூலை பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் இன்று(10) நடைபெற்றது. இதன்போது கிழக்குப் பல்கலைக் கழகத்தினது மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய வளாகங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 893 பேர் தமது பட்டம்களை பெற்றுக்கொண்டனர். நான்கு கட்டங்களாக இடம்பெற்ற இவ்விழாவில் கலை கலாசாரம், வர்த்தக முகாமைத்துவம், விஞ்ஞான விவசாயம் மருத்துவம் போன்ற துறைகளில் உள்வாரியாக பட்டப்படிப்பை பூர்த்திசெய்த, 221 பேர் முதலாம் கட்டத்திலும் 243 பேர் இரண்டாம் கட்டத்திலும் 245 பேர் மூன்றாம் கட்டத்திலும் பட்டங்களைப் பெற்றனர். நான்காம் கட்டமாக வெளிவாரியாக படிப்பைப் பூர்த்திசெய்த 184 பேருக்கு பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், பேராசிரியை உமா குமாரசுவாமி விஞ்ஞானத்துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றமை குறிப்பிடத்தக்கது..