Breaking News

மாணவன் மீது சூடான தேநீரை வீசிய ஆசிரியருக்கு பிணை!!

ஆறாம் ஆண்டு மாணவன் மீது  கொதிக்கும் தேநீரை ஊற்றியமைக்காக கைது செய்யப்பட்ட ஆசிரியரை, நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்த அதேவேளை அவ்வாசிரியருக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளார். 

நீர்கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவன் பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் ஆசிரியரின் மீது தவறுதலாக மோதியதில் ஆசிரியரின் கையில் இருந்து தேநீர் ஆசிரியரின் மேல் கொட்டியுள்ளது,  இச்சம்பவத்தல்  ஆத்திரமடைந்த குறித்த ஆசிரியர், எஞ்சியிருந்த தேநீரை மோதிய மாணவன் மீது ஊற்றியுள்ளார் இதனால் காயமடைந்த  மாணவன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்திய நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர், குறித்த ஆசிரியரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்செய்தபோதே நீதவான் குறித்த ஆசிரியரை கடுமையாக எச்சரித்தது மேலே குறித்தவாறு விடுதலை செய்துள்ளார்.