Breaking News

28 வயதுடைய இளைஞனின் சிறை யன்னலில் தூக்கிட்டு மரணம் !!! ; புசல்லாவையில் பதற்றம்

நீதிமன்ற உத்தரவின் பேரில் புஸ்ஸல்லாவை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் காவலில் இருந்த நடராஜா ரவிச்சந்திரன் எனும் 28 வயதுடைய இளைஞனின் சிறையிலேயே தூக்கில் தொங்கி மரணமடைந்ததாக கூறப்படும்  சம்பவம் தொடர்பில் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவருட்பட கானஸ்டபிளுமாக இரு பொலிஸ் அதிகாரிகள் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தினால் புஸ்ஸல்லாவைபகுதியில் மக்கள் வீதியில் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாமையால் அங்கு பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.