Breaking News

வங்காளதேசில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி

வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவின் வடபகுதியில் பொருட்களை ‘பேக்கிங்’ செய்யும் பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றுள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று  காலை சுமார் 6.15 மணியளவில் ஒரு ராட்சத கொதிகலன் திடீரென வெடித்து சிதறியது. இதையடுத்து, நான்கு மாடிகளை கொண்ட அந்த தொழிற்சாலையில் மளமளவென தீ பரவியது. உள்ளே இருந்த தொழிலாளர்கள் பீதியால் அலறியபடியே உயிர்பயத்துடன் வெளியே ஓடிவந்தனர்.

அவர்களில் பத்துபேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.   20-க்கும் அதிகமானோர்  காயமடைந்தனர்.  இவ்விபத்து தொடர்பான தகவல் அறிந்ததும் 20-க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்களில் வந்த மீட்புப் படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.