Breaking News

காவல்துறை அதிகாரியை குளிர்சாதன பெட்டிக்குள் புதைத்து வீட்டில் குடும்பம் நடத்திய இளம் ஜோடி !!

காவல்துறை அதிகாரி ஒருவரின் உடலை குளிர்சாதன பெட்டிக்குள் புதைத்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Cayenne மாவட்டத்தின் Roura நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இளம் ஜோடிகள் வசித்த வீடு ஒன்றில் இருந்த குளிர்சாதனப்பெட்டி ஒன்றில் இருந்து முற்றாக சிதைவடைந்த நிலையில் காவல்துறையினர் மீட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணைகளில், கடந்த ஒருமாத காலமாக குறித்த காவல்துறை அதிகாரியின் உடல் குளிர்சாதனப்பெட்டிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் எவருக்கும் எவ்வித துர்நாற்றமும் வரவில்லை என தெரிவித்துள்ளார்கள். குளிர்சாதனப்பெட்டி முற்றாக பொதி செய்யப்பட்டு இருந்ததாகவும் அறியமுடிகிறது. காவல்துறை அதிகாரியை கொலை செய்த்தது யார் என்பது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிது

சடலம் மீட்கப்பட்ட வீட்டில் வசித்த, 22 வயது ஆண், 17 பெண் என இளம் ஜோடிகள் இருவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணைகளின் பின்னர் மீதி தகவல்கள் தெரிவிக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்