Breaking News

தனக்கு தானே சத்திர சிகிச்சை செய்துகொண்ட பொறியியலாளர் !!

இங்கிலாந்தில் வசித்து வரும் கிரகாம் ஸ்மித் என்ற என்ஜினியருக்கு 15 வருடங்களுக்கு முன்னர் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின்னர் அவருக்கு வயிற்றில் உள்ள பிரச்சனை தீராமலே இருந்து வந்தது.

இந்நிலையில் வயிற்றில் தையல் போட்ட இடத்தில் அவருக்கு வலியுடன் இரத்த கசிவும் ஏற்பட்டது. இதனால் மருத்துவரை அணுகி தனக்கு உடனே அறுவை சிகிச்சை செய்யும் படி கேட்டார்.

மருத்துவர் அறுவை சிகிச்சை உடனே செய்ய மறுத்து அறுவை சிகிச்சைகாக காத்திருப்போர் பட்டியலில் அவர் பெயரையும் சேர்த்துள்ளார். இதனால் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மருத்துவர் சொன்ன தேதி வரை என்னால் காத்திருக்க முடியவில்லை. நானே கத்தியை எடுத்து பாதிப்புள்ள பகுதியை கிழித்தேன்.

பின்னர் உள்ளே இருந்த 8 மி.மீ நைலான் நூலை வெளியில் எடுத்து அந்த இடத்தில் 12 தையல்களை போட்டேன். இப்போது நான் நிம்மதியாக உணர்கிறேன், என்று கூறினார்.

மேலும் இவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவ நிர்வாகம் தானாக முன்வந்து அவரது உடல் நிலையை பரிசோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.