Breaking News

கோள் போட்ட மகிழ்ச்சியில் உயிரை விட்ட கால்பந்து வீரர்!!

இந்தியாவின் மிசோரம் பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு மிசோரம் பிரீமியர் லீக் தொடர் நடந்தது. இதில் பெத்லகேம் வெங்க்லாங் அணியும், சான்மாரி வெஸ்ட் அணியும் மோதியது.

இந்து ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் பெத்லகேம் அணியை சேர்ந்த 23 வயதான பியாக்சான்ஜூவலா என்ற இந்திய வீரர் கோல் அடித்து அசத்தினார்.

இதனால் உற்சாகம் அடைந்த அவர் ஜெர்மனி வீரர்களை போன்றே அந்தரத்தில் பல்டி அடித்து கொண்டாடினார். அப்போது கீழே விழுந்த அவருக்கு முதுகு தண்டுவட பகுதி உடைந்ததால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி விட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.