Breaking News

செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் கண்டு பிடிப்பு..!?

செவ்வாய் கிரகத்தைப் பற்றி நான்கு வருடங்களுக்கு மேலாக ஆராய்ந்து வரும் கியூரியோசிட்டி ரோவர் விண்கலம் தற்போது அங்கு திரவ நிலையில் நீர் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விஞ்ஞானிகள் கூறுகையில் இந்த நீரானது செவ்வாயில் காணப்படும் Perchlorate எனும் இரசாயனப் பதார்த்தத்தினால் வளிமண்டலத்திலுள்ள நீராவியை உறுஞ்சுவதனால் சேமிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இங்குள்ள திரவங்கள் 70 டிகிரி செல்சியஸ் எனும் மறை வெப்பநிலையில் உறைந்து மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது, எனவே   நுண்ணுயிர்கள் இருக்கிறது என்கிறார்கள்.

எனினும் செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியிலுள்ள 15 செண்டி மீட்டார்  உயரமான மணலில் உயர் மட்டத்திலான கதிர்ப்பு நடைபெறுவதனால் உயிர் வாழ்க்கைக்கு சவாலாக விளங்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.