Breaking News

அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் "யாழ் கம்பன் விழா 2016 " எதிர்வரும் செப்டெம்பர் 15 முதல் 18 வரை யாழ்ப்பாணத்தில்.

அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் "யாழ் கம்பன் விழா 2016" எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வியாழக் கிழமை தொடக்கம் 18ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வரையான நாட்களில் யாழ்ப்பாணத்தில் நிகழவுள்ளது.

இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கவென தமிழகத்திலிருந்து புகழ்பெற்ற பேச்சாளர்கள் பேராசிரியை இரா.ருக்மணி, பேராசிரியர் அரங்க.இராமலிங்கம், புலவர் இரெ.சண்முகவடிவேல் ஆகியோர் வருகை தருகின்றனர்.

தங்கள் சுற்றம் சூழ்ந்த வருகையால் நிகழ்வை சிறப்பிக்கவேண்டுமென அன்புடன் அழைத்து நிற்கிறோம்.
- அகில இலங்கைக் கம்பன் கழகத்தினர் -