சம்பூர் அனல் மின் நிலையத் திட்டம் இடை நிறுத்தம் !!!
சம்பூரில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த அனல் மின் நிலையத் திட்டத்தினை நடைமுறைப் படுத்த போவதில்லை என அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.
நேற்றைய தினம் இவ் அனல் மின் நிலையத் திட்டத்திற்கு எதிராக சூழல் பாதுகாப்பு நிறுவனமம் தாக்கல் செய்த வழக்கானது உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது அரச தரப்பிலிருந்து இவ் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் குறித்த அனல் மின் நிலையத்துக்கு எதிரான அடிப்படை உரிமை வழக்கானது கைவிடப்பட்டுள்ளதுடன் இத்திட்டத்தை எதிர்த்து பிரதேச மக்கள் தொடர் போராட்டங்கள் நடாத்தியமையும் குறிப்பிடத்தக்கது.