கர்நாடக பந்த் பசியால் அளுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெங்களூர் பெண்கள்..! தாய்மையின் புனிதம் !
நேற்று கர்நாடகாவில் மாநிலம் தழுவிய பந்த். கர்நாடகா மொத்தமும் ஸ்தம்பித்து போனது.
இயல்பு வாழ்கை முற்றிலும் தொலைந்தது. தமிழர்கள் பகுதியில் உணவு மருந்து முக்கியமாக பால் கிடைக்காமல் மிகுந்த அவதிப்பட்டனர் மக்கள். குறிப்பாக அரசு பொது மருத்துவ மனையில் நோயாளிகள் பட்ட கொடுமை பரிதாபமானது.
அரசு எந்த முன் நடவடிக்கையும் செய்ய வில்லையாம். பிரசவ வார்டுகளில் குழந்தை பெற்ற பெண்களை உறவினர்கள். பிறந்த குழந்தைகள் பால் இல்லாமல் கதற மருத்துவமனை அவரசர அவரசரமாக உதவிக்கரம் நீட்ட முயன்றுள்ளது.
ஆனாலும்பசியால் குழந்தைகள் கதற, அதே ஆஸ்பத்திரியில் குழந்தைகள் பெற்ற சில பெண்கள், தமிழர்கள் குழந்தைகளை அள்ளி எடுத்து வாஞ்சையுடன் தாய்பால் கொடுத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சி அங்கிருந்த அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது. மருத்துவமனை ஊழியர்களும் கண்ணீர் விட்டனர்…!
தாய்மைக்கு மொழி ஏது .மதம் ஏது …அனைத்தையும் கடந்தது தானே தாய்மை..!