Breaking News

தரையில் ஓடிய காங்கேசன்துறை கடுகதி ரயில் !!!

காலை 5.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணத்தை மேற்கொள்ளவிருந்த கடுகதி ரயிலானது வேகக்கட்டுப்பாட்டினை இழந்து காங்கேசன்துறை ரயில் நிலைய முடிவிதினையும் தாண்டி சுமார் 140 அடிகள் தூரத்திற்கு தரையில் ஓடியதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. 

எனினும் இச்சம்பவம் நிகழும்போது ரயிலில் பயணிகள் இருக்கவில்லை எனவும் எவருக்கும் எவ்வித  பாதிப்புகழும்  ஏற்படவில்லை எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது. நிலைமையினை சீர்செய்யவென அனுராதபுரம் ரயில் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து தொழில்நுட்ப அதிகாரிகள் வரவழைக்க பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.