Breaking News

புறக்கோட்டையில் 4 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் கொள்ளை !!!

புறக்கோட்டையில் இயங்கிவரும் தங்க ஆபரணங்கள் செய்யும் நிறுவனமொன்றில் நுழைந்த நால்வர் தம்மை வெளிவிவகார அமைச்சின் பரிசோதகர்கள் என்று போலியாக இனங்காட்டிக்கொண்டு அங்கு பணிபுரிந்தவர்களுக்கு கைவிலங்கிட்டு, தங்கத்தையும் ஒருலட்சம் ரூபாய் பணத்துடன் அங்கு கடமையாற்றிய இந்தியர் ஒருவரின் கடவுச்சீட்டையும் எடுத்துக்கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இக்கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மிக முக்கிய தகவல்கள் தமக்கு கிடைத்த்துள்ளதாக போலிசார் தெரிவிக்கின்றனர்.