Breaking News

திருக்கோவில் பகுதியில் மின்னல் தாக்கத்தால் விவசாயி மரணம் !!!

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவில் உள்ள தங்கவேலாயுதம் கிராமத்தில் நேற்று(18) மாலை மின்னல் தாக்கத்தினால் 6 பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய மயில்வாகனம் தவபுத்திரன் எனும் விவசாயி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விவசாயி வயலில் வேலையை முடித்துவிட்டு,வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.