பாசிக்குடா கடலில் தமது இரு பிள்ளைகள் காணாமல் போதையடுத்து சோகம் தாங்காமல் பெற்றோர் தற்கொலை !!
நேற்றயதினம் பாசிக்குடா கடலில் குளிப்பதற்கெனச் சென்ற சகோதரர்களான சண்முகம் 22 வயதுடைய சுரேஸ்குமார் மற்றும் 18 வயதுடைய சண்முகம் சதீஸ்குமார் ஆகிய இளைஞர்கள் நேற்று மாலை முதல் காணாமல் போயுள்ள நிலையில் தற்போது ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதவனும் தெரிவிக்கப்படுகிறது
மேலும் இன்று காலை வரை பிள்ளைகள் வீடு திரும்பாததால் சோகம் தாங்காத பெற்றோர் இன்று காலை தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மட்டக்களப்பு பட்டியடைச்சி பகுதியில் வசித்த வேலுப்பிள்ளை சண்முகம் மற்றும் சண்முகம் யோகலக்ஷ்மி ஆகி பெற்றோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவு குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.