Breaking News

கர்நாடக - தமிழக எல்லை சீல் வைக்கப்பட்டது !!

காவிரியில் தமிழகத்துக்கு 15000 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து கர்நாடகா முழுவதும் போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இதனால் கர்நாடகாவில் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனையடுத்து தமிழக, கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள செக்போஸ்டில் இரண்டு மாநில போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.