அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடரும் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் !
அனுராதபுரம் சிறைச்சாலையில் 20 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் இன்றும் தொடர்கிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது வழக்குகளை தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்றுவதுடன் விசாரணைகளை துரிதக்கோரி கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.