Breaking News

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் மீண்டும் தோண்டபட்டது !

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நீதிமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் உடலம் இன்று மீட்டும் தோண்டி எடுக்கப்பட்டது. சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்கும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும்  இடையில் வேறுபாடு காணப்படுவதனால் கல்கிஸ்சை நீதவான் மொஹமட் சஹாப்தீனால் கடந்த 8 ஆம் திகதி வழங்கிய அனுமதிக்கமைவாக பரிசோதனைகளை மீள மேற்கொள்வதற்குகென சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டது.