Breaking News

விரைவில் அமுலாவுள்ள புதிய சட்டம் !!

நேற்றயதினம் (01) சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தொலைதொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர்  ஹரின் பெர்ணான்டோ நாட்டின் குற்றவியல் சட்டங்களுக்கு அமைவாக இணைய குற்றங்களுக்கு (சைபர் கிரைம்) தண்டனை வழங்குவதற்கான. புதிய சட்டமொன்றை கொண்டு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அங்கு தெரிவிக்கையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவிய  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 17 வயது சிறுவன், கல்வியில் திறமைசாலியானவன் எனவும் அவருக்கு, புலமைபரிசில் பெற்றுக்கொடுக்க அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.