Breaking News

நீங்க சரியாக ‘ஷேவிங்’ பண்றீங்களா ? இல்லேன்னா தப்பாய்டும்…!

‘சேவிங்’ குறித்து நிறையவே தெரியும். ஆனால் ‘ஷேவிங்’ விஷயத்தி ல் பலரும் பல முக்கிய அம்சங்களை மற ந்து விடுகிறோம்.

ஷேவ் செய்வதில் என்ன பெரிசா இருக்கு, ரேசரை எடுத்தோமா, ஷேவ் செய் தோமா என்று போக வே ண்டியதுதானே என்று சிலர் கூறலா ம்.

ஆனால் அதிலும் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. கேளுங்க…

காலையில் எழுந்ததுமே ஷேவ் செய்ய உட்கார்ந்து விடக் கூடாது. நீங்கள்தான் எழுந்திருக்கிறீர்கள், உங்களது தோல் இன்னும் தூக்கத்திலிருந்து விழித்திருக்காது.

இரவு முழுவ தும் தூங்கியிருப்பதால் உங்களது கன்னம் சற்று உப்பியிருக் கும். அதற்குக் காரணம், உங்களது தோலின் அடிப்பகுதியில் தேங்கியுள்ள திரவம். அது குறையும் வரை காத் திருப்பது அவசியம். அப்போதுதான் உங்களால் சிறப்பாக ஷேவ் செய்ய முடியும்.

ஷேவ் செய்வதற்கு முன்பு பேஷியல் கிளன்சர் அல்லது ஸ்கரப்பை வைத்து லேசாக கன்னத்தை தேய்த்துக் கொடு த்துக் கொள்வது நல் லது.

அப்படி செய்வதால் எல்லா முடி களையும் எழுப்பி விட லாம். இதன் மூலம் அனை த்து முடி யையும் முழுமை யாக ஷேவ் செய்ய முடியும்.

ஷேவிங் செய்வதற்கு முன்பு இதமான சுடு நீரால் நமது முகத்தை அல்லது எங்கு ஷேவ் செய்கிறோமோ அந்த இடத்தில் தடவி ஈரமாக்கிக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் முடி யின் கடினத் தன்மை குறைந்து, தோலை வெட்டிக் கொள் ளாமல் முடி யை மட்டும் ஷேவ் செய்ய உதவியாக இருக் கும்.

ஷேவிங் கிரீமை முகத்தில் தடவும் போது அது நன்கு முடி முழுவதும் ஊடுறுவும்படி பூச வேண்டும். அப்போதுதான் ஷே வ் செய்யும் போது முடி முழுவ தும் அகல வழி கிடைக்கும்.

எப்போதுமே கூரிய பிளேடையே பயன்படுத்துங்கள். இதன் மூலம் விரைவில் ஷேவ் செய்ய லாம், அத்தோடு, தோல் முரட்டுத்தனம் அடைவதையும் குறைக்க முடியும்.

‘மொட்டை’ யான பிளேடைப் பயன்படுத்தி னால் பலமுறை ‘வறட் வறட்’ என் று இழுக்க நேரிடும். அது தோலு க்கு பாதிப்பைக் கொடுக்கும்.

எப்போதுமே முடியின் இயல்பு க்கேற்பவே ஷேவ் செய்ய வேண் டும். எதிர்புறமாக செய்தால் அது முடியின் வேர்ப் பகுதியைப் பாதிக் கலாம்.

தோலில் புண்ணை ஏற்படுத்தி விடலாம், முரட்டுத் தனமாக தோல் மாறவும் வாய்ப்பு ஏற்படுத்தலாம். எனவே அதை தவிர்ப்பது நல்லது.

ஷேவிங்தானே என்று நினைக்காமல் அதை ஒரு கலையாக நினைத்து அழகாகச் செய்தால் முக அழகை மேலும் வசீகர மாக்கலாம்.