Breaking News

யோஷிதவிற்கு புதன் தீர்ப்பு !!

வெளிநாடு செல்வதற்கு அனுமதிகோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன்  யோஷித ராஜபக்ஷவின் சட்டத்தரணிகளால் கடந்த செவ்வாய்க்கிழமை(20) சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் அவர் செல்ல எதிர்பார்க்கும் நாடு, பயணத்திற்கான காரணம் தெரிவிக்கப்பட்டிருக்கமையால் இது தொடர்பான விசாரண,இ நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போது தன்னுடைய பாதத்தில் உபாதை இருப்பதாகவும் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் அமைந்துள்ள வைத்தியசாலைக்குச் செல்ல எதிர்ப்பார்ப்பதாகவும் யோஷித ராஜபக்ஷவினால் மன்றில் தெரிவிக்கப்பட்டது. தொடர்பிலான  தீர்ப்பு, எதிர்வரும் புதன்கிழமை (28) அன்று வழங்கப்படுமென, கொழும்பு மேல் நீதிமன்றம்  நேற்றயதினம்(22) அறிவித்தது.