Breaking News

விராட் கோஹ்லி மிரட்டி விட்டார் ஜெயசூர்ய ஓபன் டாக்!

இந்தியாவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரும், தேர்வு குழு தலைவருமான சனத் ஜெயசூர்யா.

அப்போது அவர் கூறும்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னை பற்றி நான் பேசவே கூடாது. ஆனால் அரசியல் வேறு, கிரிக்கெட் வேறு என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

விளையாட்டை எப்போதும் அரசியலுடன் தொடர்பு படுத்த கூடாது. விராட் கோஹ்லி அணியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். அதே போல தனிப்பட்ட வீரராகவும் அசத்தி வருகிறார். இலங்கை தொடரின்போது அவரது ஆட்டத்தை நான் பார்த்தேன். எப்போதும் பெரிய ஓட்டங்களை எடுக்வே அவர் முயற்சி செய்கிறார்.

நியூசிலாந்து அணி’கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் 2 டெஸ்ட் போட்டியில் அவர் பெரியதாக சோபிக்கவில்லை. ஆனால் 3வது போட்டியில் மொத்தமாக இரட்டை சதம் அடித்து மிரட்டி விட்டார் என்றார்.