Breaking News

யாழ் மாணவர் கொலை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜிதவை பதவி விலகுமாறு அழுத்தம் !

கடந்த 2011ம் ஆண்டு இளைஞர் ஒருவர் கட்டுநாயக்கவில் வைத்தது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் தொடர்பில் அப்போதைய பொலிஸ் மா அதிபராக பதவி வகித்த மஹிந்த பாலசூரிய இராஜினாமா செய்ததைப் போல அண்மையில் இடம்பெற்ற யாழ் மாணவர் கொலைக்கான முழுமையான பொறுப்பையேற்று போலீஸ் மா அதிபர் பூஜிதவை பதவி விலகுமாறு அமைச்சரவை மட்டத்தில் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.