Breaking News

பாடசாலை சீருடைக்கான பண வவுச்சர்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

பாடசாலை மாணவர்கள்  சீருடைகளை கொள்வனவு செய்யக்கூடிய வகையில் பாடசாலைகளுக்கு பண வவுச்சர்களை பாடசாலைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று(01) ஆரம்பிக்கப்படவுள்ளன. 

குறித்த வவுச்சர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் எனினும் தரம் ஒன்றிற்காக சேர்த்துக் கொள்ளப்படவிருக்கும் சிறார்களினது வவுச்சர்கள், அவர்கள் பாடசாலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட பின்னரே வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.