Breaking News

முரளிதரனின் 66 இல் தொட்டதை ஹெராத் 75இல் தொட்டார் !!

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை ஹராரேயில நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 257 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்டில் வெற்றி பெற்று இருந்ததால் 2 -0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வென்றது.

இந்த தொடரில் முழுமையாக அசத்தியவர் ஹெராத். மேலும் இந்த தொடருக்கு தலைமை பொறுப்பை ஏற்றவர். முதல் டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹெராத் இரண்டாவது டெஸ்டில் 13 விக்கெட்டுகளை அள்ளினார்.

2 டெஸ்டுகளிலும் சேர்த்து மொத்தம் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். மேலும் 350 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை இதன் மூலம் எட்டியுள்ளார். இதன் மூலம் முத்தையா முரளி தரனுக்கு பிறகு குறைந்த போட்டியில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முத்தையா முரளிதரன் 66 போட்டிகளிலேயே 350 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஹெராத் 75 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.