Breaking News

தண்டனை விதிக்கப்படும் வயதெல்லை உயரத்தப்படும் !!

குற்றவியல் தவறொன்றிற்கு தண்டனை விதிக்கப்படும் ஆகக் குறைந்த வயதெல்லையை உயர்த்துவது மற்றும் மேலும் சில அடிப்படை அம்சங்கள் சிலவற்றில் மாற்றங்களை செய்வதற்கு, அமைச்சரவையினது அங்கிகாரம் கிடைத்துள்ளதாகவும் இதில் குறிப்பாக,

குற்றமிழைத்தவர் 12 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவராக காணப்படும் சந்தர்ப்பத்தில் அவருக்கு தண்டனை வழங்கப்படக்கூடாது எனவும், 12 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள், குற்றச்செயல்களைப் புரியக்கூடிய கடினமான மனநிலையைக் கொண்டிருக்கும் நிலையில், அது குறித்து நீதவான் அவதானித்திருக்கும் பட்சத்தில் தண்டனை வழங்கும் வகையிலான உறுப்புரைகளை உள்ளடக்கியதாகத் அமைந்திருக்கும் என அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.