“என்னை கூப்பிடவே இல்லை…ஆனா என்ன? சார் மீது மரியாதைகாகவே வந்தேன் "
நேற்று மும்பை யாஷ்ராஜ் பிலிம்ஸ் ஸ்டுடியோவில் 2.0 படத்தின் முதல் தோற்ற வெளியீட்டு விழா நடந்தது. இதற்கு ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், எமி ஜாக்சன், அக்சய் குமார் மற்றும் படக்குழு கலந்துகொண்டது. வேறு பெரிய பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ள வில்லை என்றாலும்…பார்வையாளர் வரிசையில் சல்மான் கான் வந்து அமர்ந்தது கண்டு எல்லோருமே வியப்படைந்தனர்.
அதன் பின் சல்மான்கானை மேடைக்கு அழைத்தனர். அப்போது பேசிய சல்மான் ” என்னை யாரும் இந்த விழாவுக்கு கூப்பிடவில்லை. ஆனால் விழாவிற்கு ரஜினி சார் வருவார்ன்னு தெரியும். ரஜினி சார் மீது மரியாதை வைத்துள்ளேன். அவரை பார்க்கவே வந்தேன். ” என்றார்.