ஜும் ஆ பள்ளிவாசல் மீது தாக்குதல் நாடாத்தியவர்களை உடன் கைது செய்ய வேண்டும்- முதலமைச்சர் !!!
இருந்தால் அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பது கேள்விக்குறியாகும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே இந்த நல்லாட்சியை மாசுபடுத்த வெளியாகி, நச்சுக்கருத்துக்களை அள்ளி வீசும் நாசகார சக்திகள் யாராக இருந்தாலும் அவர்களை இந்த அரசு கைது செய்ய வேண்டும். அவர்களுக்கெதிரான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். தவறிழைத்த பெரும் புள்ளிகளை எல்லாம் கைது செய்யும் இந்த நல்லாட்சி அரசு, விஷமத்தனமான கருத்துக்களை வீசும் பொதுபல சேனாவின் செயலாளர் மற்றும் அந்தக் குழுவினர் செய்யும் அநியாயம் மற்றும் இனவாதச் செயல்களை இன்னும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பது ஏன் என்றும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேள்வி எழுப்பினார். எனவே இன்றைய நல்லாட்சி நீடிக்க வேண்டும்.
இந்நாட்டில் வாழும் மூவினத்தையும் சேர்ந்த அனைத்து மக்களும் நிம்மதியாக வாழவேண்டும். அவர்களுக்கு மன அமைதி வேண்டும் என்ற நிலமையினை, அரசு மீண்டும் ஒருமுறை பரிசீலனை செய்து மக்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என முதலமைச்சர் தனதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.