Breaking News

முதியோர் இல்ல ஒளிவிழா நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு முதியோர் இல்ல ஒளிவிழா நிகழ்வு 13.12.2016  மாலை திருகோணமலை வீதியில் உள்ள  முதியோர் இல்ல  நடைபெற்றது.




மட்டக்களப்பு திருகோணமலை வீதி முதியோர் இல்ல தலைமை அருட்சகோதரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் மட்டக்களப்பு மறைக்கோட்ட குருமுதல்வர் எ .தேவதாசன் , தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய  பங்கு தந்தையர்கள் ஏலக்ஸ் ரொபட் மற்றும்  முதியோர் இல்ல அருட்சகோதரிகள் ,முதியோர் இல்ல ஊழியர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ,வைத்தியர்கள்  என பலர்  கலந்துகொண்டனர்.



இதன்போது  ஒளிவிழாவினை சிறப்பிக்கும் வகையில் இல்ல முதியோர்களின் கிறிஸ்து பிறப்பு கலை நிகழ்வுகள்  இடம்பெற்றதுடன் நத்தார் பாப்பா வருகை தந்து ஆடிப்பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.