Breaking News

இடைநிலை ஆய்வுகூட நூலகத்துடனான தொழிநுட்பப் பிரிவு கட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(லியோன்)]

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் இடைநிலை ஆய்வுகூட நூலகத்துடனான தொழிநுட்பப் பிரிவு கட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குற்பட்ட மட்டக்களப்பு   கல்லடி ,முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தில் 13.12.2016 செவ்வாய்கிழமை  நடைபெற்றது .


நாட்டை  அறிவின்  கேந்திரமாக  அபிவிருத்தி  செய்யும்  நோக்காக கொண்டு   இடைநிலைப்   பாடசாலைகளையும்   ஆரம்பப் பாடசாலைகளையும் அபிவிருத்தி  செய்யும்   தேசிய  வேலைத்திட்டத்திற்கு அமைவாக  தெரிவு  செய்யப்பட    பாடசாலைகளை  மீளமைக்கும் தேசிய  நிகழ்ச்சித் திட்டத்தின்  கீழ்   அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை செயல் திட்டத்தின்  கல்வி  அமைச்சின்  நிதி  ஒதுக்கீட்டின்   ஆரம்பப்பிரிவு கற்றல்வளங்களுக்காக  கட்டிடங்கள்   நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது .

இதன்  கீழ் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள இடைநிலை ஆய்வுகூடம் நூலகத்துடனான தொழிநுட்பப் பிரிவு கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மட்டக்களப்பு  வலயக்கல்விப்  பணிப்பாளர்  கே . பாஸ்கரன்   தலைமயில்     நடைபெற்றது .

இந்நிகழ்வில்  கிழக்குமாகாண சபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான   இரா .துரைரட்ணம்,   கே .கருணாகரன்  மட்டக்களப்பு  வலயக்கல்விப்  பணிப்பாளர்  கே . பாஸ்கரன்  ,  வலயக்கல்வித் திணைக்கள  பொறியியலாளர் எ .எம் .எம் . ஹக்கீம் , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எ .சுகுமாரன்  மற்றும்   பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி     குழு உறுப்பினர்கள்  பெற்றோர்கள் , பாடசாலை பழைய மாணவர்கள் ,நலன் விரும்பிகள் , பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் , கல்வி சாரா ஊழியர்கள் என    பலர்  கலந்துகொண்டனர்.