தாய்மார்கள் மற்றும் சிறார்களுக்கான (தொலோஸ் மகே பாஹான) இசை வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்
(லியோன்)
தாய்மார்கள் மற்றும் சிறார்களுக்கான
(தொலோஸ் மகே பாஹான) இசை
வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்
நிகழ்வு மட்டக்களப்பு மட்டிக்களி சுகாதார பணிமனையில் இன்று நடைபெற்றது .
கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக
கலாசார அதிகாரசபையுடன் மட்டக்களப்பு
சுகாதார பிரிவு இணைந்து நடாத்திய தாய்மார்கள் மற்றும்
சிறார்களுக்கான (தொலோஸ் மகே பாஹான) இசை வேலைத்திட்டம் சுகாதார வைத்திய அதிகாரி
திருமதி . கீர்த்திகா மதனழகன் ஏற்பாட்டில்
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் மட்டக்களப்பு மட்டிக்களி
சுகாதார பணிமனையில் இன்று நடைபெற்றது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பின் பாரம்பரிய கலை கலாசார பாடல்களின் தொடர்பான
எதிர்கால வேலைத்திட்டங்கள் இதனுடன் இணைந்ததாக தாலாட்டுப்பாடல்கள், சிறார்களின் பாடல்கள்
தொடர்பாக கலந்துகொண்ட தாய்மார்களுக்கு தெளிவூட்டல்களும், கலந்துரையாடல்களும்
இடம்பெற்றது .
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை வடக்கு கிழக்கு கலாசார
பணிப்பாளரும் மண்முனை வடக்கு பிரதேச கலாசார அதிகார சபை உபதலைவருமான எஸ் . எதிர்மன்
சிங்கம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச
செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி . சாலினி மதன்குமார் ,பிரதேச செயலக உற்பத்தி
திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி . லோகநாதன் ஜீவராணி , ஆயிர்வேத
அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி .த .வேணுகா , சுகாதார குடும்பநல தாதிய
உத்தியோகத்தர்கள் , தாய்மார்கள் உட்பட சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் பலர்
கலந்துகொண்டனர்