பணிப்பகிஷ்கரிப்பின்போது பாதிக்கப்பட்ருக்கு சட்ட உதவிகளை வழங்க நாம் தயார் !!!
கடந்த வெள்ளிக்கிழமையன்று தனியார் பஸ் சங்கத்தால் நடாத்தப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியிலான உதவியை வழங்குவதற்கு, ஜாதிக ஹெல உறுமய முன்வந்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார் இது குறித்தது அவர் மேலும் கருத்தித்துரைகையில் குறித்த பணிப்பகிஸ்கரிப்பானது அரசியல் பின்புலம் உடையதெனவும் எவ்வாறாயினும் குறித்த நாளில் இலங்கை போக்குவரத்து சபையினர் ஒரு சிறந்த சேவையை வழங்கியிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.



