Breaking News

மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு.

கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியாக முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் இடம்பெற்ற வருகின்றன.

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் நிகழ்வுகள்  11.01.2016 புதன்கிழமை இடம்பெற்றது.

இதன் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு கல்வி கோட்டத்தின் மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர்  டி .அருமைத்துரை   தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் தரம் 02 மாணவர்கள் முதலாம் தரத்திற்கு வருகை தந்த புதிய மாணவர்களை மலர் மாலை அணிவித்து வரவேற்றதுடன் மாணவர்களின் வரவேற்பு கலை நிகழ்வுகளும் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ.சுகுமாரன், அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாச்சாலை அதிபர் எ.எஸ்.யோகராஜா, வலயக்கல்வி அலுவலக உடல் இயக்க செயல்பாட்டு பொறுப்பாளர் சிவராசா, பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.அன்பழகன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
(லியோன்)