Breaking News

மர்மநபர் ஒருவரால் பாரிஸில் தொடர் கத்தி குத்து தாக்குதல்..!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இடம்பெற்ற தொடர் கத்தி குத்து சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதே ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 09.15 மணியளவில் இடம்பெற்ற முதலாவது கத்தி குத்து சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டதாக கருதப்படும் சந்தேகநபர் தப்பிச்சென்ற நிலையில், இரவு 11 மணியளவில் Jacques Bonsergent மெட்ரோ ரயில் நிலையத்தில் மற்றும் ஒரு கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

எனினும், இந்த தாக்குதல் சம்பவத்தில் இருந்து பயணிகள் தப்பித்துக்கொண்ட நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர், இறுதியாக மற்றும் ஒரு கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இந்த தாக்குதல் இன்று அதிகாலை 12.50 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Gare de L’Est மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அனைத்து கத்தி குத்து தாக்குதல் சம்பவங்களையும் ஒரே நபரே மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரை அந்நாட்டு பொலிஸார் தீவிரமாக தேடி வருவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரான்ஸ் தொடர்ச்சியாக தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காகி வந்துள்ளமையினால், இந்த தாக்குதல் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.