அதிகாரிகள் மேலைத்தேய ஆடைகளுக்கு விடுமுறை !
அரச சேவையின் உயர்மட்ட அதிகாரிகள், மேலைத்தேய முறையிலான ஆடைகளை அணிவது அவசியம் என்ற சுற்றுநிருபத்தை முடிவுறுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்துள்ளார். இதற்கமைய அரச சேவையின் உயர் நிலை அதிகாரிகள், அத்தியாவசிய தேவைகளைத் தவிர, அனைத்து சந்தர்ப்பங்களிலும் கழுத்துப் பட்டி மற்றும் கோட் உடனான உத்தியோகப்பூர்வ ஆடை அணிய வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த்துள்ளார்.