வேலியை சேதப்படுத்தி நபர் ஒருவரை தாக்கியது தொடர்பில் கைது செய்யப்பட நபர்களுக்கு எதிராக 06 மாத கால சிறைத்தண்டனை
வேலியை சேதப்படுத்தி நபர் ஒருவரை
தாக்கியது தொடர்பில் கைது செய்யப்பட நபர்களுக்கு எதிராக 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத கால சிறைத்தண்டனையும், 21
ஆயிரம் ரூபா நஷ்டஈடு
செலுத்துமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார் .
புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த நாகராசா கனகலிங்கம் என்பவருக்கு சொந்தமான
வேலியை சேதப்படுத்தி குறித்த நபரை தாக்கியது
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட
கஜேந்திரகுமார், என் .பிரசாத் ,விஜயன் ஆகிய மூவருக்கும் எதிராக 02.04.2014 திகதி அன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு
தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
குறித்த வழக்கு தொடர்பாக 2014 ஆம் ஆண்டில் இருந்து வழக்கு நடைபெற்ற
வந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் 31.01.2017 ஆம் திகதி செவ்வாய்கிழமை மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளது .
குறித்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதி குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியங்கள் நிருபிக்கப்பட்டதன் காரணமாக
குற்றவாளிகளுக்கு எதிராக 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத கால சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட
நபருக்கு , 21 ஆயிரம் ரூபா நஷ்டஈடு செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜாவினால் கட்டளை
இடப்பட்டு தீர்ப்பளித்துள்ளார்
(லியோன்)