மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள்.
மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய இல்ல விளையாட்டு
போட்டி நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 2017ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று பாடசாலை மைதானத்தில் அதிபர் கே,ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கிழக்குமாகாண சபை பிரதி தவிசாளர் என்.பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன்
கருணாகரன், கொத்துக்குளத்து மாரியம்மன் ஆலய பரிபாலன சபை
உறுப்பினர் எம்.யோகராஜா, கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எம்.விஸ்வநாதன்,
மயிலம்பாவெளி மகளிர் கிராம அபிவிருத்தி தலைவி திருமதி ஜெ.யோகராஜா, பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், அயல் பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர், அதனை தொடர்ந்து தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் மாணவர்களின் இல்ல அணிவகுப்பு நடைபெற்றது.
விளையாட்டு நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்களின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.
2017ஆம் ஆண்டுக்கான பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளினால் பரிசில்களும், சான்றிதழ்களும், வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது.
நடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கிழக்குமாகாண சபை பிரதி தவிசாளர் என்.பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன்
கருணாகரன் ஆகியோருக்கு பாடசாலை ஆசிரியர்களினால் பொன்னாடை போர்த்தி
கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(லியோன்)