Breaking News

சிவானந்தா விளையாட்டுக் கழகத்தின் சிவானந்தா உதைபந்தாட்ட தொடர் – 2017

சிவானந்தா விளையாட்டுக் கழகத்தின் சிவானந்தா உதைபந்தாட்ட  – 2017 தொடர்  20.03.2017 ஆம் திகதி முதல்  20.04.2017 ஆம் திகதி வரை மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில்   நடைபெறவுள்ளது .


இந்த உதைப்பந்தாட்ட தொடரானது  சிவானந்தா விளையாட்டுக் கழக வீரர்கள், சிவானந்தா வித்தியாலய பாடசாலை மாணவர்கள் மற்றும் கழகத்தின் மூத்தவீரர்களின் பங்கு பற்றுதலுடன் சிவானந்தா விளையாட்டுக் கழகம் முதல் முறையாக நடாத்துகின்றது  

இந்த போட்டியில்  தெரிவு செய்யப்பட்ட கழக வீரர்கள் , பாடசாலை மாணவர்கள் மற்றும் கழகத்தின் மூத்தவீரர்களில் 05 அணிகளாக  பிரித்து லீக் முறையிலான போட்டியாக நடாத்தப்படுகின்றது .

ஒவ்வொரு அணிகளுக்கிடையிலான  போட்டியானது 20.03.2017 ஆம் திகதி முதல்  தினமும் மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு 01 மணித்தியால நேரம் கொண்ட போட்டியாக நடத்தப்படுகின்றது .

இந்த உதைபந்தாட்ட  தொடரை  கண்டுகளிக்க  சிவானந்தா வித்தியாலய விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்து ஆதரவினை வழங்குமாறு மட்டக்களப்பு உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு  அழைப்புவிடுக்கின்றனர்.


தகவல்செயலாளர் சிவானந்தா விளையாட்டுக் கழகம்