Breaking News

தேசிய நல்லிணக்கத்துக்கு நாட்டைப் பிரிக்காது அதிகாரத்தை பகிர வேண்டும் !!

நேற்றயதினம் மருதானையில் விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாட்டைப் பிரிக்காமல் அதிகாரத்தைப் பகிர ​வேண்டும் என தெரிவித்துள்துடன், மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அதிகரிக்கும்படியே வடக்கு முதலமைச்சர் உள்ளிட்ட ஏனைய முதலமைச்சர்களும் கோரிக்கை விடுத்துள்ளனரே தவிர, நாட்டைப் பிரிப்பது அவசியம் என அவர்கள் யாரும் கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.