ஜப்பானின் கடலோரப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம்
டோக்கியோ: ஜப்பானின் கடலோரப்பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது. டோக்கியோவின் தெற்கே உள்ள ஒகாசவாரா தீவுகள் அருகில் கடலுக்கு அடியில் 480 கி.மீ., ஆழத்தை மையமாக வைத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கின. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் ஏதும் இல்லை



